சின்ன குஞ்சி அம்மா சாய்மாதா அவர்கள் கூத்தனூரில் யாருடைய வீட்டின் முன்பும் எவ்வளவு மலைபெய்தாலும் ஒரு சாக்கு கூட இல்லாமல் மாலை சாரலில் திண்ணையில் அமர்ந்து இருப்பார்கள் உறங்கும் நிலையிலும் கூட சின்ன மறைப்பு கூட இல்லாமல் வெற்று உடம்புடன் காலம் கழித்ததுண்டு தன்னை காண வரும் பக்தர்களிடம் அடுப்புகரி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் வாங்கி தரும்படி கேட்பார்கள் சீரடி சாய்பாபா துவாரஹாமாயியில் அமர்ந்து துணி என்னும் அக்கினி குண்டத்தில் மக்களின் கருமாக்களையும் சேர்த்து எரித்தார் இதற்காக எப்பொழுதும் விறகு சேகரிப்பதிலும் ஈடுபடுவார், நம் சாய்மாதாவும் எரிபொருட்களை மக்களிடம் கேட்டு அக்னியில் அவர்களின் கருமத்தை எரிப்பதோடு மட்டுமல்லாமல் தீய சக்திகளிடமிருந்தும் நம்மை காத்துவருகிறார் இதில் சில பக்தர்கள் அன்னை சாய்மாதாவிற்கு காகிதங்களையும் ஓலைகளையும் சேகரித்து கொடுப்பதுண்டு சாய்மாதாவின் துணியோ ஒரு சிறிய மண் சட்டியாகவோ அல்லது வெறும் தரையாகவோ இருப்பதுண்டு எப்பொழுதும் அது எரிவதும் உண்டு இதில் அதிசயம் என்னவென்றால் பச்சை மட்டைகளும், தலைகளும் ஆளுயர எரிவதுண்டு மலையில் சாரலுடனும், நெருப்பில் தனலுடனும், பூமியை படுக்கையாகவும் இயற்கையை இருக்கையாகவும் கொண்டு இயல்பாக இயற்கையுடன் இணைந்து வலம் வரும் இறைதூதரே எங்களின் இறைவன் ஆவார் மழை நாட்களில் அக்னிக்கு அருகில் இருந்துவிட்டு அம்மா வெளியில் நடமாடும் பொழுது காண்பவர்களே கவிதை எழுத வைக்கும்.
மழை காலத்து மழைமேகமாய் புகை பிடித்த மேனியுடன் புலலென
வரும்பொழுது புண்ணியம் செய்தேன் தாயே உன்னை கண்டு விட்டால்
உன் கருமை படர்ந்த தேகத்தில் எங்கள் கர்மங்கள் தொலிந்ததென்று
வெற்றுகாலுடன் வெய்யலில் நடக்கையில்
பகட்டுடையார் பட்டென்ற காலில் விழுவர்
வெற்றுடம்புடன் வீதியில் நடக்கையில்
சேதி அரியாதவர் விதியுடன் நடந்தார்
No comments:
Post a Comment